Loading

திங்கள், 15 நவம்பர், 2010

ஊழல்vs1ராஜினாமா

திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் பதவி விலகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து டெல்லி வந்த அவர், நேரடியாக பிரதமரின் இல்லத்துக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
பிரதமரிடம் தனது ராஜிநாமாவை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ராசா செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது கட்சித் தலைவரின் அறிவுரையின்பேரில், அரசுக்கு ஏற்படும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் வகையில் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகவும், அதற்காக தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்வதாக அர்த்தம் இல்லை என்றும், தன் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை நிரூபிக்கப் போவதாகவும் கூறினார்.

தொலைத் தொடர்புத்துறை தனது தலைமையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டிருப்பதாகவும், மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் தொடர்ந்து உழைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னையில் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆ. ராசாவை பதவி விலகுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் காமன்வெல்த் போட்டி (அக்.3-14 ) நடந்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட 70 ஆயிரம் கோடி ரூபாயில் பெருமளவு ஊழல் நடந்தது தெரியவந்தது.
 காமன்வெல்த் போட்டி தொடர்பான ஊழல் குறித்து விசாரிக்க, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தனிப்பிரிவை அமைத்தது.
இந்நிலையில் காமன்வெல்த் ஊழல் சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் கல்மாடி , காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற செயலர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான்,  கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தாருக்கு ஒதுக்கப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் தனக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து  அசோக்சவான், தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கொடுத்திருந்தார். 

 ராஜினாமா கடிதத்தின் மீதான முடிவு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே அசோக்சவான் பதவி மீதான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,   அசோக்சவான் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சசி தரூர் தம்மை பொறுப்புள்ள அமைச்சராக எப்போதும் நினைத்த மாதிரி தெரியவில்லை. இதற்கு முன்னரும் பல நேரங்களில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.சசிதரூர் தனது காதலி சுனந்தாவுக்கு கொச்சி அணியின் ரூ. 70 கோடி பங்குகளை வாங்கி கொடுத்த விவகாரம் எளிதாக வெடித்ததுமே மத்திய அரசு உஷார் அடைந் தது. இது தொடர்பாக விசாரிக்க தொடங்கியது. மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தனது துறை மூலம் விசாரணை களை நடத்தினார். இதற்காகத்தான் ஐ.பி.எல். அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தினார்கள். லலித்மோடியிடமும் விசாரணை நடந்தது. இதன் மூலம் சுனந்தாவுக்கு கொச்சி அணி பங்கு எப்படி கை மாறியது? சசி தரூர் எந்த வகையில் சம்பந்தப்பட்டார் என்பது போன்ற விவரங்களை தெரிந்து கொண்டனர்.

அதே நேரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மத்திய உளவுத்துறையான ஐ.பி.க்கு இதன் முழு விவரங்களையும் சேகரித்து தரும்படி உத்தர விட்டார். அதில் சசிதரூர் எந்த வகையில் எல்லாம் தனது மத்திய மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்? சுனந்தா சசிதரூரின் பினாமியா? இதில் ஊழல் நடந்து இருக்கிறதா? போன்றவற்றை விசாரிக்கும்படி பிரதமர் கூறி இருந்தார்.

அதன்படி ஐ.பி. விசாரணையை தொடங்கியது. மற்றொரு உளவுத்துறையான “ரா”வும் இது தொடர்பாக விசாரித்தது. கொச்சி அணியை ஏலம் எடுத்த “ரென்டஸ்வஸ்” நிறுவனத்துக்கு ஏலத் தொகையில் பெரும் பகுதி பணம் துபாயில் இருந்து வந்துள்ளது. அந்த பணம் யார் மூலம் வந்தது? இதற்கும் சசிதரூருக்கும் சம்பந்தம் உண்டா? கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் முயற்சியில் இந்த முதலீடு செய்யப்பட்டதா, என்று விசாரித்தனர்.

சுனந்தாவுக்கு ரூ. 70 கோடி பங்குகள் இலவசமாக கொடுக்கப்பட காரணம் என்ன? இதற்கும் துபாயில் இருந்து வந்த பணத்துக்கும் சம்பந்தம் உண்டா? என்றும் விசாரித்தனர். அதில் சசிதரூர் முழுக்க, முழுக்க சம்பந்தப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். ஊழல் நடந்து இருப்பதும் தெரிந்தது. இதில் சசிதரூர் தனது மத்திய மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
அவர் எந்தெந்த வகையில் எல்லாம் தவறு செய்து இருக்கிறார் என்ற முழு விவரத்தையும் சேகரித்தனர்.

பின்னர் இது தொடர்பாக “ஐ.பி.யும், “ராவும் சேர்ந்து ஒரு அறிக்கை தயாரித்தனர். அதில் சசிதரூர் செய்த தவறுகள் அனைத்தையும் பட்டியலிட்டு இருந்தனர். 6 பக்கம் கொண்ட இந்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் அடைத்து பிரதமரிடம் கொடுத்தனர். அதை பிரதமர் நேற்று காலையிலேயே படித்து பார்த்தார். அதன் பின்னர் சசிதரூரை தனது வீட்டுக்கு அழைத்து விசாரித்தார்.

உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்த அனைத்து விவரங்கள் குறித்து சசிதரூரிடம் அவர் விளக்கம் கேட்டார். ஆனால் சசிதரூரால் அதற்கு சரியான விளக்கங்களை கொடுக்க முடியவில்லை. ஏன் என்றால் உளவுத்துறை அறிக்கையில் அத்தனை விவரங்களும் துல்லியமாக சேகரித்து கொடுக்கப்பட்டு இருந்தன. எனவே சசிதரூரால் எதையுமே மறைக்க முடிய வில்லை.

அவர் மீது குற்றம் இருப்பது நிரூபணம் ஆனதால் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடும்படி அப்போதைய பிரதமர் கூறி விட்டார்.
ஆனாலும் மாலையில் நடந்த காங்கிரஸ் உயர்மட்ட குழுவில் இதுபற்றி விவா தித்து இறுதி முடிவு எடுத்தனர். அதில் எடுத்த முடிவு படி சசிதரூர் ராஜினாமா செய்தார்.

சசிதரூர் ஆரம்பத்தில் எனது மாநில (கேரளா) நலனுக்காகவே தலையிட்டேன் என்று கூறி வந்தார். ஆனால் உளவுத்துறை அறிக்கையில் அவர் தனது காதலிக்காக இதில் தலையிட்டதும், பல தவறுகள் செய்ததும் உறுதிப் படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சசிதரூர் தப் பிக்க முடியாமல் பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 


Part 1



Part 2


Part 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக