Loading

ஞாயிறு, 14 நவம்பர், 2010

அரபு நாடுகளில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் நிறுவனம் அதாவது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 2 நாளைக்கு முன்னாடி ஒரு அறிவிப்பு கொடுத்தது. அதை எல்லாரும் படிச்சுருப்பீங்கன்னு நெனைக்கிறேன். படிக்காதவங்களுக்காகவே அல்லது நியூஸ் பேப்பர் பக்கமே போவதில்லை என சொல்லும் சகோக்களுக்காக இந்த பதிவு. (சட்டுபுட்டுன்னு மேட்டருக்கு வா. )



என்ன விஷயம் தெரியுமா? அரபு நாடுகளில் உள்ள பல பெரியகம்பெனி மற்றும் முன்னணி கம்பெனிகளுக்குவேலை செய்ய ஆள் இல்லையாம். அதுனால வேலைஆட்கள் வேண்டுமாம். ஆனாலும் எல்லாரும் போய்விட முடியாது. சில தகுதிகள் வேண்டும்.கீழே படிங்க புரியும்



சில முக்கிய குறிப்பு:
  • அதுவும் 21 வயசுல இருந்து 35 வயசுக்குள்ள இருக்கும் நபர்கள் தான் வேண்டும்.
  • பத்தாம் வகுப்பு மட்டும் பாஸாகி இருக்குறவங்களுக்கு இங்க்லீஸ், ஹிந்தி தெரிஞ்சுருந்தா ஹோட்டல்களில் வேலை. அல்லது அலுவலக வேலை.
  • ஐடிஐ முடிச்ச வேலை அனுபவமுள்ள  பிளம்பர், ஏ.சி. டெக்னீஷியன்கள், கேபிள், எலக்ட்ரீசியன்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை மற்றும் அதிக வேலைவாய்ப்பு இருக்கு.
  • அவரவர் செய்யும் வேலை, அவர்களின் தகுதி, அவர்களின் அனுபவம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் சம்பளத்தோட சேர்த்து இதர வசதிகளும் செய்து கொடுப்பாங்க.

இவ்வளவு தான். இந்த தகுதி இருக்குறவங்க, இந்த வேலைக்கு போகணும்னு ஒத்த காலில் நிற்பவர்கள் மேலே சொல்லப்பட்ட தகுதிகளுக்கான சான்றிதழ் எடுத்துட்டு ( பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஐடிஐ முடித்த சான்றிதழ், அனுபவத்திற்காக முன்பே வேலை செய்த கம்பெனி கொடுக்கும் சான்றிதழ், இன்னபிற சான்றிதழ்கள் ), பாஸ்போர்ட், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என எல்லா தெளிவான விவரங்களுடன் முதல் நிலை தேர்வில் கலந்துக்கொள்ளலாம். 

நடக்கும் இடம் : திருச்சியில் உள்ள திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்
  
நடக்கும் நாட்கள் : நவம்பர் 20, 21

நான் சொன்னது கொஞ்சம் புரிஞ்சு மிச்சம் புரியல, பாதி புரிஞ்சு மீதி புரியல, இல்ல சுத்தமாவே புரியல என்பவர்கள் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டு மேலும் பல தகவல்கள்,சந்தேகங்கள் கேட்டுக்கொள்ளவும்.
9940393617, 9952940460, 9940276356

தயவு செய்து வேலை இல்லாதவர்களுக்கும் வேறு வேலை தேடுபவர்களுக்கும் இந்த தகவலை சொல்லிடுங்க. மற்றவர்களை வாழ வைத்த புண்ணியம் உங்களுக்கு கிட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக