அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம், புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது.இப்பசுவின் மரபணுக்களில், இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் முதன் முறையாக மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டு குளோனிங் மூலம் ரோசிட்டா ஐ.எஸ்.ஏ., உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பால், தாய்ப்பாலில் உள்ள விட்டமின்களைக் கொண்டிருக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பசு உருவாக்கத்திற்கான முயற்சியை இந்நிறுவனமும், சான்மார்ட்டின் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக