Loading

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011



இஸ்லாமிய மார்க்கத்திற்கும், நபிகள் நாயகத்திற்கும் எதிரான கருத்துக்களை தனது பரீட்சை வினாத்தாளில் எழுதிய பாகிஸ்தானின் காராச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அந்நாட்டுப் போலிஸார் கைது  செய்தனர், முஹமட் சமியுல்லா என்ற 17 வயதான அவர் கடந்தவருடம் ஏப்ரல் மாதத்தில் தோற்றிய பரீட்சையின்போது தனது வினாத்தாளில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஹம்மது நபியை அவமதிக்கும் வகையிலும் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இவ்விஷயம் தொடர்பில் அந்நாட்டுக் கல்வி உயர் அதிகாரி ஒருவர் போலிஸில் புகார் செய்ததையடுத்தே அந்த மாணவன் கைது செய்யப்பட்டான்.

இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி மக்பூல் மெமோன் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அங்கு கடுமையான சட்டதிட்டங்கள் நிலவுகின்றன.

முஹமட் சமியுல்லாவிடம் போலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அவர் அளித்த வாக்கு மூலத்தில் தன்னுடைய உறவினர்கள் இருவர் நோர்வேயில் இருந்து விடுமுறைக் காலத்தில் பாகிஸ்தானிற்கு விஜயம் செய்துள்ளனர். இதன்போது அவர்கள் இஸ்லாம் பற்றிய தவறான சில கருத்துக்களை தனக்கு தெரிவித்ததாகவும், இதனால் தான் சிறிது குழப்பத்திற்கு ஆளாகியதாகவும் அதன் பின்னரே இவ்வாறு பரீட்சை வினாத்தாளில் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனின் வயதைக் கருத்தில் கொண்டு மன்னிப்பு வழங்க வேண்டும் என பல சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
veerakesri

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக