சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலை சமீபத்தில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. விரைவில் மேலும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், டீசல், கெரசின் மற்றும் சமையல் காஸ் விலையையும் உயர்த்த வேண்டும் என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.