Loading

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?



ஆமதாபாத், ஆக. 12: 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மற்றொரு ஐபிஎஸ் அதிகாரிக்கு அந்த மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தெரியவந்திருக்கிறது.



குஜராத் காவல்துறையில் டிஐஜி அந்தஸ்தில் பணிபுரியும் ராகுல் சர்மா என்கிற ஐபிஎஸ் அதிகாரி, அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

2002 வன்முறை நேரத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் அடங்கிய சிடிக்களை சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) உள்ளிட்ட அமைப்புகளிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல் கொடுத்ததற்காக உங்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பிருப்பதற்கு அந்த மனுவில் ராகுல் சர்மா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அபிலாஷா குமாரி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. எந்த அடிப்படையில் தமக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்று கேட்டு மாநில அரசுக்கு தாம் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் அதுபற்றிய தகவல்களை அரசு தரவில்லை என்றும் மனுவில் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

விளக்கமளிப்பதற்கு சர்மாவுக்கு வழங்கிய கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இதன்பிறகு அவர்மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே குஜராத் வன்முறை தொடர்பாக சஞ்சீவ் பட் என்கிற ஐபிஎஸ் அதிகாரி கடந்த செவ்வாய்க்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்., இவை அனைத்தும் முதல்வர் மோடியின் உத்தரவின் பேரில் அரங்கேறியது குறிப்பிட தக்கது.

கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களை கொலைசெய்ய உற்சாக மூட்டியதும், பொருளாதாரத்தை சூறையாட ஆலோசனை வழங்கியதும் நரேந்திர மோடியின் நேரடி உத்தரவுகளே! மேலும், முஸ்லிகளை கொலை செய்தவர்களையும், அவர்களை கற்பழித்தவர்களை பாராட்டி பாதுகாப்பும் அளித்ததும் இந்த நரேந்திர மோடியே தான், மட்டுமல்லாமல் மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள்.

அதற்கு பிறகு சட்டம் ஒழுங்கை நான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனாலும் மூன்று நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவராமல் 2 மாதத்திற்கும் மேலாக இனப்படு கொலையை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.


மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.

தெஹல்கா ரகசியமாக படம் பிடித்த வீடியோ காட்சிகளில் ஒவ்வொருத்தரும் தாங்கள் செய்த செயல்களை விபரமாக எடுத்துச் சொல்லிடும்போது நடந்த அக்கிரமங்கள் அனைத்தும் நம் கண்முன்பாக வருகின்றன. இத்தகைய கொடூரங்கள் அனைத்தையும் அவர்கள் தங்களது வீர சாகசங்கள் போன்று விபரிப்பது அவர்கள் பயிற்றுவிக்கப்பட்ட சங்பரிவாரத்தின் கொலைமுகத்தை தெளிவாகவே காட்டுகிறது.

ஆனால் இவை அனைத்தும் முதல்வர் நரேந்திர மோடியின் ஆமோதிப்பின் பேரில் நடந்ததுதான் அக்கிரமத்திலும் அக்கிரம். இந்த கொடியவன் நரேந்திரமோடி மனிதகுலத்திற்கே ஒரு அவமானம். அவன் முதல்வராய் இருப்பது என்பது இந்திய இறையாண்மை செத்துப்போனதையே நமக்கு அறிவிக்கிறது. மத்திய அரசு உடனே தெஹல்காவின் வீடியோக்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக