இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டு வெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புகளில், 4 பேர் பலியானதாகவும், 100 பேர் காயமடைந் துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மும்பை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது. மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகிய இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக