நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்காவிட்டால் கச்சா எண்ணெய் தருவதை நிறுத்தி விடுவோம் என இந்தியாவை ஈரான் எச்சரித்துள்ளது.
உலக பொருளாதாரதடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஈரானிடமிருந்து சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த 6 மாதங்களாக கச்சா எண்ணெய்க்கான தொகையை இந்தியா அளிக்கவில்லை.
ஆசிய, அய்ரோப்பிய வங்கிகள் மட்டுமின்றி சமீபத்தில் ஜேர்மன் வங்கியும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் முதல் திகதியிலிருந்து கச்சா எண்ணெய் தருவதை நிறுத்தப் போவதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் எச்சரித்துள்ளதாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் மீது உலக பொருளாதார தடை உள்ளதால் அந்நாட்டுக்கு பிற நாடுகளின் நாணயங்களில் அளிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு ஈடாக இந்தியா தங்கத்தை அளித்து இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக