Loading

புதன், 22 ஜூன், 2011

* சிறுவனை பாடாய்படுத்தும் தோல் எரிச்சல் : மேல்சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டே வாழும் வினோத நோயால் தாக்கப்பட்ட சிறுவன் கீர்த்திவாசன், மேல்சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கிறார். முத்துப்பேட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரது மகன்கள் பாரதி, 8, கீர்த்திவாசன், 7. கீர்த்திவாசன் முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவரது உடல் தோலில் இருக்க வேண்டிய ஆறு அடுக்கில், நான்கு அடுக்குகள் குறைவாக உள்ளன. இதனால், இவருக்கு வியர்ப்பதில்லை. வெப்பம் அதிகமாகும் போது, உடலில் கொப்புளத்துடன் எரிச்சல் ஏற்படுகிறது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை உடலில் தண்ணீர் ஊற்றும் நிலை உள்ளது. மழை, குளிர் காலங்களில் கூட மாற்றமில்லை.

தந்தை குமார் கூறியதாவது: பிறந்ததிலிருந்து இந்த நோய் இருந்தது. அடிக்கடி காய்ச்சல் வரும். பல டாக்டர்களிடம் காண்பித்தோம். இறுதியில் திண்டுக்கல் மருத்துவமனையில் காண்பித்த போது, அங்கிருந்த கனடா டாக்டர் ஒருவர், "தோல் பிரச்னை' என கண்டுபிடித்தார். ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார். குளிர் பிரதேசத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறார். பண பற்றாக்குறையால் எங்கும் செல்லவில்லை. யாராவது எனது மகனுக்காக உதவ வேண்டும். இதற்காக, கலெக்டர் அருண்ராயிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு குமார் கூறினார். இவருக்கு உதவ விரும்புவோர் 97889 91417ல் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக