இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை அளவுக்கு ஒரு கொடுமையை நான் வேறெங்கும் கண்டதில்லை என மனித உரிமை ஆர்வலர் அருந்ததி ராய் தெரிவித்தார்.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பகுதியில் நடைபெற்ற இச்சந்திப்பில் லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர் அப்போது அருந்ததிராய் இந்த கருத்தை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது குண்டு போட்டது, பள்ளி கூடங்கள் மீது குண்டுமழை பொழிந்து பள்ளி குழந்தைகளை கொன்று குவித்தார்கள்.
அதுபோல் குறுகிய திறந்த வெளி நிலப்பரப்பை போர் அற்ற பாதுகாப்பு பிரதேசமாக அறிவித்து, அப்பகுதிகளுக்குள் மக்களை வரச்சொல்லி பின் அப்பகுதிக்குள் ஏவுகணை மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக