ராமநாதபுரம்: பணம் கொடுப்பதற்கு தேர்தல் கமிஷன் தடாவிதித்தது போல் ,இனி வரும் தேர்தல்களில், தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் குறித்து அறிவிக்காத வகையில் நடவடிக்கையில் இறங்க வேண்டும் ,என ,நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதைய தேர்தலில் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டை பெற்றுவிடலாம் என்ற நினைப்பு தவிடுபொடியாகிவிட்டது. அதையும் மீறி வாழ்வா சாவா போராட்டத்தில் சிலர் கோடி கோடியாக பணத்தை பதுக்கி வைப்பதும், அதை தேர்தல் அலுவலர்கள் பிடிப்பதும் தொடர்கிறது.
இதை பார்க்கும் நடுநிலையாளர்கள், தற்போதுதான் ஜனநாயகப்படி தேர்தல் நடக்கிறது என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் வரும் தேர்தல்களில் இதைவிட ஒருபடி மேலே சென்று, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இலவசங்களை தருகிறோம் என கூறுவதற்கும் தடைவிதித்தால், மக்கள் சுயமாக சிந்தித்து ஓட்டுபோடும் நிலை ஏற்படும். அப்போது நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்வதற்கும் ஒருவாய்ப்பாக இருக்கும். வரும் தேர்தல்களில் இலவச அறிவிப்பிற்கும் தடை செய்யும் வகையில் தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டும் என நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றிதினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக